search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு"

    கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீரென மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் ராஜசேகர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்தநிலையில் நேற்று அங்கிருந்து திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு வேறு பணி வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

    இதையடுத்து கரூர் மாவட்ட புதிய போலீஸ்சூப்பிரண்டாக சென்னை கணினி மயமாக்கல் துறையின் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விக்கிரமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் அதிரடியாக மாற்றப்பட்டதும் அவருக்கு புதிய பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல் இருப்பதும் காவல் துறை மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. தேர்தல் பிரசார பாதுகாப்பு ஏற்பாடுகளில் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது அதிருப்தி ஏற்பட்டதாலும் ராஜசேகர் மீது எழுந்த சில புகார்கள் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு கடிதம் எழுதியது. அவரை மாற்ற பரிந்துரை செய்தது. அதன் எதிரொலியாகவே ராஜசேகர் மாற்றப்பட்டு விக்கிரமன் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதேபோன்று பாராளுமன்ற தேர்தல் முதலே கரூர் மாவட்டத்தில் பல பிரச்சனைகள் எழுந்தது. வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியான கலெக்டர், உள்பட பல அதிகாரிகள் மீது புகார்களை அடுக்கிக்கொண்டே இருந்தனர். சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலும் குளறுபடி தொடர்பாக புகார்கள் கூறப்பட்டது. அதிகாரிகள் மட்டத்தில் எழுந்த கருத்து வேறுபாடும் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் மாற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
    ×